ஜனவரி 19, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் கடந்த 65 ஆண்டு காலமாக மருத்துவ அறத்துடன் தன்னலமின்றி சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்கள் இறந்த செய்தி அறிந்த ஆழ்ந்த வருத்தமடைந்தோம். நம்பி வரும் புற்றுநோயாளிகளுக்கு கடமையும், மனிதாபிமானமும் பொங்க அவர் வழங்கிய கிசிச்சைகள் மிக சிறப்பானவை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் தாயாக அவர் கொண்டாடப்பட்டார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனக்கு கிடைத்த வருவாயை தான் பணியாற்றிய நிறுவனத்திற்கே வழங்கிய மாமணி ஆவார். புற்றுநோய் ஒழிப்பு போராளியாக செயல்பட்டு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவரது மரணம் அனைவரையும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் சக மருத்துவர்கள், குடும்பத்தினர், பணியாளர்கள், அவரால் குணமடைந்தவர்கள் என அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது. அனைவருடன் ஆறுதலையும் பகிர்ந்துக் கொள்கிறது. இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19.01.2021
இரங்கல்
ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தியறிந்து வேதனையடைந்தோம். ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர். மதிப்புமிக்க அரசியலாளர்களில் ஒருவராக பயணித்தவர். சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிருபித்த அவர், புள்ளி விபரங்களோடு பேசக் கூடியவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம் வந்தார். அவரை இழந்து வாடும் அண்ணன் GK வாசன் உள்ளிட்ட தமாகா வினருக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 15.01.2021
திராவிட இயக்க ஆய்வாளர் தொ பரமசிவன் மரணம்.!மஜக இணைப் பொதுச்செயலாளர் JSR நேரில் ஆறுதல்!
நெல்லை.டிச 25., தமிழகத்தின் முதுபெரும் திராவிட பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இல்லத்திற்கு இன்று மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S .ரிபாயி அவர்கள் நேரில் சென்றார். அவரது மகன் தொ.ப.மணி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட செயலாளர் நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, பாளை பகுதி செயலாளர் சேக் அப்துல்காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 25-12-2020
பன்னூலாசிரியர் யூசுப் Sp மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
பன்னூலாசிரியரும், மார்க்க அறிஞரும், த.மு.மு.க வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவருமான யூசுப் SP அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் துயறுற்றோம். அவர்,எண்ணற்ற நூல்களை எளிமையான மொழி நடையில் தமிழ் உலகிற்கு தந்த சிறந்த எழுத்தாளர் ஆவார். கடினமான விஷயங்களை கூட எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில் அவரது உரைகள் இருக்கும். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். மஜக தொடங்கிய பிறகு அன்பு நிமித்தமாக எமது தலைமையகத்திற்கு வருவார்.நேசம் நிரம்ப பேசிவிட்டு செல்வார். அவர் இருக்கும் அவைகள் கலகலப்பாக இருக்கும். மனம் மகிழ பேசுவது அவரது சுபாவமாகும். அவர் கபடமற்றவர் என்பதால் எல்லோரிடமும் நெருங்கி பழகுவார். சிரித்த முகத்துடன் எல்லோரையும் சந்திப்பது அவரது இயல்பாகும். அவர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதிப்பட்ட நேரத்தில், அவரை அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறி வந்தோம். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். அந்த வருத்தம் எங்களை போன்று அவரோடு நெருங்கிப் பழகியவர்களை வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவருக்கு உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 15.12.2020
அகமது படேல் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அகமது படேல் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறோம். 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேசிய அரசியலில் வலம் வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் சக்தி மிக ஆளுமையாக திகழ்ந்தவர். தேசிய அளவில் கூட்டணிகளை அமைத்து கொடுப்பதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார். ராஜீவ் காந்தி அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சிலரில் இவர் முதன்மையானவராக இருந்தார். குஜராத்தின் கள அரசியல் வழியே உருவான கதர் சட்டை தேசியவாதியான இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், குஜராத்திகளுக்கும் ஆழ்ந்த வேதனைத் தரக்கூடியதாகும். அவரை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 25.11.2020