கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை,
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மஜக முற்றுகை போராட்டம்- 300 க்கும் மேற்பட்டோர் கைது…
சென்னை.மே.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் வே.மதிமாறன், பகுஜன் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு கைதாகினர். தகவல்; தகவல்
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது..! தமிழக அரசுக்கு மஜக கண்டனம்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக் கெதிராக கண்டனக் குரல்கள் எழுப்பி வரும் சூழ்நிலையில் மே-17 இயக்கமும் பல்வேறு இடங்களில் ஈழம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம். அந்த அடிப்டையில் கடந்த மே-17 அன்று முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக தோழர் திருமுருகன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வை மே-17 இயக்கம் சென்னை மெரினாவில் நடத்தியது. இதே போன்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மே-17 இயக்கம் பல்வேறு வடிவங்களில் எதிர்த்து வந்தது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய திருமுருகன், அருண்குமார் , இளமாறன் மற்றும் டைசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக ஆர்வலரும் , மனித உரிமை களத்தில் தொடர்ந்து போராடி வருபவருமான திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதும் சமூக
வேலூர் கணியம்பாடி ஒன்றியத்தில் மஜக புதிய கிளைகள் துவக்கம்..!
வேலூர்.மே.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியத்தில் 2 புதிய கிளைகள் துவக்கம். மாவட்ட அமைப்புகுழு முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலையில், பென்னாத்தூர் பேரூராட்ச்சி 3 வது வார்டு சப்தலிபுரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : பியாரு கிளை பொருளாளர் : ரசூல் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். வேப்பம்பட்டு ஊராட்சி கிளை கிளை செயலாளர்: அப்சல், கிளை பொருளாளர் : ஷயின்ஷா துணை செயலாளர்கள் : இம்தியாஸ், மதீன், பசல், இளைஞர் அணி செயலாளர் : முன்னா ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மனிதநேயத்துடன் சகோதரர்கள் களப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திப்போம். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING, வேலூர் கிழக்கு மாவட்டம். 25.05.2017.
கல்பாக்கம், கேளம்பாக்கம், மகாபலிபுரத்தில் மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
காஞ்சி.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று (16.05.2017) கேளம்பாக்கத்தில் 2-இடங்கள், ECR மகாபலிபுரம், கல்பாக்கத்தில் 6-இடங்களிலும் கொடியேற்று விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லா தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் கேளம்பாக்கம் கே.அப்துல் சர்தார், கல்பாக்கம் எஸ்.சமியுல்லா, மல்லை ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகிக்கத்தனர். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் M.com அவர்கள் கொடியேற்றி சிறப்பித்து வைத்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் திருப்போரூர் ஏ.முஹம்மது ரஃபீக், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜே.பஷீர், து.செயலாளர் இப்ராஹிம் கனி, ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி கிளை செயலாளர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் ஹக்கீம் மற்றும் கல்பாக்கம் கிளை செயலாளர் கே.முஹம்மது காலிஃப், முன்னாள் கிளை செயலாளர் எஸ்.உசேன் அலி மற்றும் கிளைகளின் ஏனைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிறகு லுஹர் தொழுகைக்கு பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி கல்பாக்கம் சகோதரர்கள் அசத்தினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 17-05-2017