நாகை. ஜூன்.25., நேற்று கேதாரிமங்களம் ஜமாத்திற்க்கு வருகைப்புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு புத்தாகரம் ஊராட்சிக்குட்ப்பட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை மின் விளக்கு, குப்பைதொட்டி, மையவாடி சுற்றுச்சுவர் போன்ற பிரச்சினைகளை கோரிக்கையை வைக்கப்பட்டது. உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பணிகள் நடைபெற பேசினார். உடன் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், மஜக மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கதலி, மாவட்ட துனை செயலாளர் யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன், ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர்ரஹ்மான் மற்றும் குவைத் மண்டல துணை செயலாளர் முஹம்மது பாசில் ஆகியோர் உடன் இருந்தனர் தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை தெற்கு மாவட்டம் #MJK_IT_WING 24.06.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி
முகமது ரிஃபாத் ஷாரூக்…! தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தம்பி !
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) விலை குறைந்த கையடக்க செயற்கை கோளை தயாரித்து உலக அளவில் இந்தியாவுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது ரிஃபாத் ஷாரூக் என்ற மாணவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழைக் குடும்பத்தில் பிறந்து , இளம் வயதில் தந்தையை இழந்து , +2 தேர்வில் வெறும் 750 மதிப்பெண்களே எடுத்துள்ள நிலையில் , இம்மாணவர் நிகழ்த்திய இச்சாதனை பெரும் பாராட்டுக்குரியது . அறிவுக்கும் , மதிப்பெண்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் , அறிவு என்பது வர்க்கம் சார்ந்து வருவதில்லை என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது . அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் உலக அளவில் 8 ஆயிரம் மாணவர்களை சோதித்து இவரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இச்செய்தியை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் O.S.மணியன் அவர்களுக்கும் , இம்மாணவனுக்கு 10 லட்சம் ரூபாயை ஊக்கப்பரிசாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு கொடுத்த மஜக பொதுச் செயலாளர்…!
சென்னை.ஜூன்.24., நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய நீண்டநாள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி சட்டசபை வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அனைவரையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையனிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் அழைத்து சென்றார்கள். சுமார் 15 நிமிடத்திற்கு சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக விளக்கினார்கள். அதை அனைத்தையும் கேட்ட அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து முழுமையாக கண்டறிய ஒரு கமிட்டி அமைப்பதாகவும், அந்த கமிட்டியின் கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். தங்களின் நீண்டகால பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்காக பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாகம். #MJK_IT_WING 23.06.2017
மஜக இஃப்தார்..! மஜக தலைவர்களுடன் தனியரசு, கருணாஸ் பங்கேற்பு..!!
சென்னை.ஜூன்.24., நேற்று மத்திய சென்னை மாவட்டம் ஐஸ்ஹவுஸ் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் பக்கேற்பதாக இருந்த விஜயதாரணி MLA அவர்கள் பெரம்பூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வர தாமதம் ஆனதால். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தார். மஜக சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் பிஸ்மி, பீர் முகம்மது உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. மத்திய சென்னை. #MJK_IT_WING 23.06.2017