பிப்.05., இன்று வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமை மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் துவங்கிவைத்து மருத்துவ முகாமின் பயன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் தொகுதி மக்கள் அவரை அன்போடு வரவேற்றனர். இம் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, கிட்னி பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யவதற்கு 400கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். முகாமை வேலூர் நகர மஜகவினர் KVR கிட்னி கேர், ஹாஜிரா கிளினிக் மற்றும் வாசன் ஐ கேர் உடன் இணைந்து சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய,நகர,வார்டு கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர் நகரம். 05.02.17
செய்திகள்
பிப்.06 விழுப்புரத்தில் மஜக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம்…
பிப்.04., விழுப்புரத்தில் மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பில் எதிர்வரும் 06-02-2017 அன்று காலை 9.00 மணிக்கு "மாபெரும் இரத்ததான முகாம்" நடைபெறஇருக்கிறது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முகாமை துவங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) விழுப்புரம் மாவட்டம். 04.02.17
மக்களின் தாகம் தீர்க்கும் மஜக…
பிப்.04., காஞ்சி வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் பகுதியில் அவர்களின் தற்காலிக தாகம் தீர்க்க குடி தண்ணீர் வைக்கபட்டு மக்கள் சேவையாற்றிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெற்றுவர்கின்றனர். மக்களின் தேவையுணர்ந்து செயல்படும் மஜகவினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) காஞ்சி வடக்கு மாவட்டம். 04.02.17
மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளராக : T.முஹம்மது ஃபிர்தௌஸ் MCA #56,ஜின்னா நகர், பேகம்பூர், திண்டுக்கல்-02 தொடர்பு எண்: 82209 03902 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா பொருளாளராக : முஹம்மது நவ்ஃபல்.BE #32, நதர்ஷா தெரு, பேகம்பூர், திண்டுக்கல்- 2 தொடர்பு எண்: 9791569533 ஆகியோர் மாணவர் இந்தியா சார்பில் நியமனம் செய்யப் படுகின்றனர். அமைப்பின் பகுதி, கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவண்: முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 03.02.17
MLA அவர்களுக்கு நாகை தொகுதி மக்கள் நன்றி!
#M_L_A_அவர்களுக்கு... #நாகை_தொகுதி_மக்கள் #நன்றி! பிப்.03., காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு எதிராக சட்டசபையில் பேசியதற்கு நாகை தொகுதி மக்கள் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தொடர்ந்து நன்றிகளையும், பாராட்டுகளையும் நேரிலும், அலைபேசியிலும் தெரிவித்து வருகின்றனர். இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வந்து MLA அவர்களை நாகூர் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நன்றி பாராட்டினர். இன்று நாகூர் செய்யது பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கு சென்ற போது அங்கும் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் செய்யது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டி சால்வை அணிவித்தனர். பனங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. நந்தினி முத்தழகன் சார்பில் நன்றி தெரிவித்து, பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. அதுபோல் பட்டினச்சேரி மீனவ மக்களும் நேரில் வந்து நன்றி கூறினர். நாகூர் முஸ்லிம் சங்கம், தர்கா ஆலோசனைக்குழு, வர்த்தக சங்க தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கேபிள் டி.வி. சங்க நிர்வாகிகள், வெளிநாடு வாழ் நண்பர்கள் மற்றும் முன்னாள் ஜமாத் நிர்வாகிகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03.01.17