சிவகாசி.ஆக.23., விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். பின்னர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணி காதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல IKP நிர்வாகி சீனி முஹம்மது மற்றும் இராஜபாளையம் நிர்வாகிகள், சிவகாசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING விருதுநகர் மாவட்டம். 23.08.17
Author: admin
சிவகாசியில் புதிய ஜவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…!
சிவகாசியில் புதிய ஜாவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்...! சிவகாசி.ஆக.23., இன்று 23/08/17 விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்களின் ஜீ கலக்ஷன்ஸ் மென்ஸ்வேர் துணிகடையை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் துவங்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணிகாதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிவகாசி நகர நிர்வாகிகள், இராஜபாளையம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். உடன் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல நிர்வாகி சீனி முஹம்மது ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING விருதுநகர் மாவட்டம். 23.08.17
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மஜக கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது! தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 22.08.17
புழல் சிறையிலிருந்து மஜக பொதுச்செயலாளருக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மடல்..!
சென்னை.ஆக.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மடல்.. பெரு மதிப்பிற்கும், மரியாதைக்குரிய தோழர். தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு.. வணக்கம் தோழர். சென்னை மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு நடத்தமுயன்று கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையிட்டிருக்கும் நடவடிக்கை குறித்து தொடர்ந்து எதிர்பினை நீங்கள் பதிவு செய்து வருவது எங்களை போன்ற இளம் இயக்கத்திற்கு பெரும் ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இக்கைது குறித்து சட்டசபையில் கடந்த மாதம் (ஜுலை) கூட்டுத்தொடரில் தொடர்ந்து நீங்கள் எழுப்பி குரல் மிக முக்கியமானதும், ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாகும். எங்கள் விடுதலை மட்டுமல்லாமல் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் கொலைவழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆயுட் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒருமித்த கருத்தினை சட்டசபையில் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த உங்களுக்கும், உங்களுடன் இணைந்து நின்ற தோழர் தனியரசு MLA அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை உரித்தாக்க அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். சாமானிய மக்களின் மீதான அடக்குமுறை, அரசியல் சிறைவாசிகள் மீதான விடுதலை குறித்தான விவாதம் ஜனநாயக தன்மையோடு சட்ட சபையில்
கூம்பு வடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில் தடை ஆணை பெற்றுதந்த வழக்கறிஞர் ஷானவாஸ்கானுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!
கோவை.ஆகஸ்ட்.22., கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி 70 டெசிபில் அளவில்தான் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோவை சுற்றியுள்ள பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அதிலும் குறைவாக 30 முதல் 40 டெசிபில் அளவில்தான் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக காவல்துறையினர் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது போன்று , உத்தரவிற்கு மாறாக அத்துமீறி பள்ளிவாசலில் 30 முதல் 40 டெசிபில் என்ற குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தி தொடர்ச்சியாக ஒருதலை பச்சமாக நடந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவரும், வால்பாறை பார்கவுன்சில் தலைவருமான வழக்கறிஞர் ஷானாவாஸ் கான் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்டுத்துவதாகவும், காவல்துறை வேண்டுமென்றே பொய்யாக வழங்கு தொடர்ந்து இருப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தக்கூடாது என காவல்துறையின் நடவடிக்கைக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கூம்புவடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு தடை ஆணை பெற்றுதந்த வால்பாறை