மறைந்த கோவை சிறைவாசி ஒஜீர் அவர்கள் குடும்பத்திற்கு வாக்குறுதியளித்த நிலம் ஒப்படைப்பு..!

image

image

image

image

கோவை.ஜன.13., கோவை சிறைவாசி சகோ.ஒஜிர் அவர்கள் கடந்த 05.10.2016 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து அவரின் நல்லடக்கத்தில் பங்கேற்ற சமுதாய தலைவர்கள் பலரும் அக்குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிப்பதாக தெரிவித்தனர்,

மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமீமுன்அன்சாரி MLA அவர்கள் ரூ.1 இலட்சம் நிவாரண தொகை வழங்குவதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து மஜக சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது, வாக்குறுதியளித்த பல இயக்கங்களும், ஜமாத்துகளும் நிவாரண உதவி வழங்கினர்.

இன்று அக்குடும்பத்திற்கு சுமார் 2சென்ட் நிலம் (ரூ.8 இலட்ச ரூபாய் மதிப்பில்) இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக வாங்கப்பட்டு ஒஜிர் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மஜக சார்பாக மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ்,  அவர்கள் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து அந்த இடத்தில் முஸ்லிம் லீக் சார்பாக வீடு கட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு கூட்டமைப்பு சார்பாக முழு ஒத்துழைப்பு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.01.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.