கோவையில் மஜகவின் முயற்சியில் தமிழக அரசின் ₹6 இலட்சம் நிவாரண நிதி..! மஜக நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்த தம்பதியர்..!!

image

கோவை.ஜன.08., கோவை ஜி.எம். நகர் பகுதியில் கடந்த 07.06.17 அன்று மின்சாரம் தாக்கி சாஹிதா பானு, சல்மான், என்ற இரு குழந்தைகள் மரணமடைந்தனர்.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மற்றும் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் உயிரிழந்த குழந்தைகள் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதை தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி,  அவர்களுக்கு மஜக சார்பில் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் நேற்று 07.01.18 கோவை செல்வபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் அக்குடும்பத்தாருக்கு 6 லட்சரூபாய் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கினார்.

அதை தொடர்ந்து இன்று மஜக அலுவலகம் வந்த அக்குடும்பத்தார் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோரை சந்தித்து நிவாரண நிதியை பெற்று தந்ததற்காக மஜக தலைமை நிர்வாகிகளுக்கும் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
08.01.18