முத்தலாக் வரைவு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..!!

திருவாரூர்.டிச.28., இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறியாதவது.

முத்தலாக் குறித்து மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வரைவுதிட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திரும்ப பெற வேண்டும்.

இது குறித்து அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து பேச வேண்டும்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதசார்பற்ற கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்புக்கொண்டு தான் பேசி வருவதாகவும் கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்