காவலர் பெரியபாண்டி தியாக மரணம்! மஜக இரங்கல்…

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வெளியிடும் அறிக்கை)

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் அதே கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

அவரது உயிர் தியாகம் தமிழக மக்களை உலுக்கியிருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரோடு கூடுதல் காவலர்களை அனுப்பி இருந்தால், இந்த துயர  சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து நியாமானது.

இனி வரும் காலத்தில், காவல்துறை மேலிடம் இதுபோன்ற நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அவரது குடும்பத்திற்கு ஆறுதலாக தமிழக அரசு 1 கோடி ரூபாயை இழப்பீடாகவும், அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
13/12/2017.

image