மஜக மாநில செயலாளருக்கு “மக்கள் காவலர் விருது” வழக்கப்பட்டது..!

image

image

சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் நவம்பர் புரட்சி என்ற தலைப்பில்  மஜகவில் இணைத்துக் கொண்டார்.

அனைத்து இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினத்தில் தலைநகர் டெல்லியில் தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய மாண்புமிகு நீதியரசர் M.கற்பக விநாயாகம் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு நீதியரசர் K.இராமமூர்த்தி அவர்களால் மக்கள் காவலர் விருது மஜக மாநில செயலாளர் தென்சென்னை J.சீனி முஹம்மது அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்ட பொருளாளர் A. காதர் ஷரீப் அவர்கள் உடனிருந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அடைந்த சீனி முஹம்மது அவர்களை வரவேற்க தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜியா, துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட இளைஞரனி செயலாளர் முஹம்மது கனி, ஆயிரம் விளக்கு 109 வட்ட செயலாளர் முஹம்மது அஸாருதீன் , மற்றும் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்_சென்னை_மேற்கு
11.12.17