தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மஜகவின் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்..!

image

image

image

image

image

தூத்துக்குடி.டிச.07., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டனஆர்ப்பாட்டம்
தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருலாளர் நவாஸ், மா.து.செயலாளர்கள் காதர்பாட்ஷா, நஜீப், மா.இ.அணி செயலாளர் ராபிக், மா.தொ.அணி செயலாளர் ராசிக் முசம்மில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தோழமை அமைப்புகளைச் சார்ந்த
அகமது இக்பால் (விசிக), சுஜித் (பு.இ.மு) அவர்களும் மஜகவின் அழைப்பை ஏற்று வருகைதந்து  தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர்.

மாலை 3.30 மணிக்கே மழைபெய்ய ஆரம்பித்த சூழ்நிலையிலும் 300க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.

இருதியாக தூத்துக்குடி நகர இளைஞரணி செயலாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_மாவட்டம்
06.12.17