திருச்சி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..!

image

image

image

திருச்சி.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி
டிசம்பர்6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று இரயில்  நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள்.

மஜக திருச்சி மாவட்ட செயலாளர்  இப்ராஹிம்ஷா தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும்,
தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர்
தோழர்.பெரியார் சரவணன் அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

இதுதவிர மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மருத்துவ சேவை அணி மைதீன் அப்துல்காதர் உரையாற்றினார்கள்.

போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் R அஸ்ரப்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திருச்சிசேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் SM. ரபிக், சேக்தாவூத்  ஜம்ஜம் பஷிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், இளைஞரணி செயலாளர்
தென்னூர் சதாம், MJTS செயலாளர் GK.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா தர்கா, பீமநகர், அரியமங்கலம், காட்டூர், கிளை செயலாளர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், உறுப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

தடையை மீறிய இரயில் நிலைய முற்றுகையில் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்.
06.12.2017.