திருப்பூரில் புதியகிளை நிர்வாகிகள் தேர்வு…!

image

image

திருப்பூர்.டிச.04.,  நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைகூட்டமும், அனுப்பர் பாளையம் கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார்.

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள் மஜகவின் செயல்பாடுகள் குறித்தும்,  டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை குறித்தும் விரிவாக பேசினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்களும், மனவாட்களும் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

இறுதியாக  அனுப்பர்பாளையம்
கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

செயலாளர் I.சாகுல்ஹமீத் அவர்கள், பொருளாளர்  M.யாசர் அவர்கள், துணை செயலாளர். M.அசாருதீன் அவர்கள், மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் டிசம்பர் 6 போராட்டத்தில் அதிக நபர்கள் கலந்து கொள்வது எனவும். விரைவில் வடக்கு பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
03.12.17

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.