பற்றி எரிகிறது டிசம்பர் புரட்சி!..! நாகை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மமகவிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!

image

image

image

image

நாகை.டிச.03., நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளிடம், துளச்சேந்திரபுரம், திருமுல்லைவாசல், வடகால், தைக்கால், கீரா நல்லூர், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த மமக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி நடைப்பெற்ற தைக்கால் கிராமத்திற்கு 3 KM முன்னதாக ஏராளமான கார்களிலும், 100 க்கு மேற்பட்ட பைக்குகளிலும் மஜக தொண்டர்கள் கொடிகளுடன் பொதுசெயலாளரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் வாகன ஊர்வலத்தை நூற்றுகணக்கான பொதுமக்கள் சாலைகள் ஒரங்களில் கை அசைத்து வரவேற்றனர்.

தைக்கால் கிராமத்தில் வீரியமான மஜக முழங்கங்களோடு மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார்.

மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் மற்றும் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_வடக்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.