கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மஜக கொடி ஏற்றும் நிகழ்வு..! மாநில நிர்வாகிகள் கொடிகளை ஏற்றிவைத்து சிற்றுரை..!!

image

image

image

கிருஷ்ணகிரி.டிச.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் நேற்று 02.12.2017 இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓசூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பாக  மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் மஜகவில் இணைந்து முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக ஓசூர் நகரின் மின் அலுவலகம் முன்பாக மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்.

இந் நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள்  சிக்கந்தர் அமீன், வசிம் அக்ரம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சைய்யது அபுதாஹிர், மண்ணிவாக்கம் யூசுப், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளார் சையத் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷபியுல்லாஹ், சர்தார்,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜாக்கிர், நகர செயலாளர் உமர், சம்சீர், சாதிக், மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கிருஷ்ணகிரி_ மாவட்டம்
03.12.2017