இரட்டை இலை குறித்து தீர்ப்பு..! மஜக பொதுச்செயலாளர் பேட்டி..!!,

image

சென்னை.நவ.23., இன்று இரட்டை இலை சின்னம் முதல்வர் திரு.எடப்பாடியார் தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை மற்றும் சன் தொலைக்காட்சிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் பிரத்யேக பேட்டி எடுத்தன, அப்போது அவர் கூறியதாவது.

தேர்தல் ஆணையம் சாதிக் அலி தீர்ப்பை காட்டியும்,சமாஜ்வாடி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தள் கட்சிகளுக்கு சமீபத்தில் கொடுத்த தீர்ப்பை ஒட்டியும், அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை முதல்வர் திரு.எடப்பாடியார் தரப்புக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. எட்டு மாத காலம் நடைப்பெற்று வந்த ஒரு சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துருப்பதாக தெரிகிறது.

இதில் வெற்றி,தோல்வியை பார்க்காமல் அதிமுகாவின் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும். அதுதான் அதிமுகவுக்கு நல்லது.

தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும், திராவிட இயக்க நீட்சிக்காகவும் அவர்கள் இணைந்து அதிமுகவை, அதன் கொள்கைப்படி வழி நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்_சென்னை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.