வேலூர் காவல்துறை துணை தலைவரை சந்தித்தார் மஜக பொருளாளர்..!

image

image

வேலூர்.நவ.23., ஆம்பூர் நகரில்  மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்படும் காவல் உதவி ஆய்வாளர் திரு. தவச் செல்வத்தை பணி இடைநீக்கம் செய்து அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போரட்டத்தை கையில் எடுப்போம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 21.11.17 அன்று  வேலூர் சரங்க DIG காவல்துறை துணை தலைவர் திருமதி.வனிதா அவர்களை சந்தித்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களின் அதிகார துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு என்பதை எடுத்துக்கூறினார்கள்.

இச்சந்திப்பில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன் , மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம் , பல்லாவரம் ஷபி , தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் S.MD.நவாஸ், குடியாத்தம் நகர செயளாலர் அனிஸ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முஹம்மத் ஜாபர், ஜாகீர் உசேன், நூருல்லா , வேலூர் கி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரபீக் ரப்பானி, ஏஜாஸ், அஸ்கர், ஜாஹிர் , யாசின் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.