பரங்கிப்பேட்டையில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!

image

image

image

கடலூர்.செப்.27., இன்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு இன்று வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பரங்கிப்பேட்டை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், மாநில துணைச் செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் உள்ளிட்டோர் உடன் வருகை தந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்று மூன்று இடங்களில் மஜக கொடி ஏற்றப்பட்டது.
பொதுச்செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி MLA  இரண்டு இடங்களிலும், மாநில செயலாளர் தஜூதீன் ஒரு இடத்திலும் கொடியை ஏற்றிவைத்தனர்.

கடைவீதிகளில் ஊர்வலமாக சென்ற போது ஆங்காங்கே பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் இடைமறித்து பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிறகு பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் பொதுச்செயலாளர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளை மனம்திறந்து பாராட்டினர்.

மேலும் மத்திய NIA உளவுத்துறையால் பரங்கிப்பேட்டை பொதுமக்கள் அடிக்கடி தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் பதிலளித்தார்.

அதன் பிறகு மக்ரிப் தொழுகைக்கு பரங்கிப்பேட்டையின் பாராம்பரியத்தை எடுத்து கூறும் மீரா பள்ளிக்கு சென்றார். அங்கு முத்தவல்லிகளை சந்தித்து உரையாடினார்.

நிறைவாக கட்சி வளர்ச்சி சம்பந்தமாக நகர நிர்வாகிகளுடன் உரையாடினார். நகர அலுவலகம் திறப்பது, எல்லா வார்டுகளிலும் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, உறுப்பினர் சேர்ப்பது ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

அங்கு கிரஸன்ட் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மரியாதை நிமிர்த்தமாக பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

இதில் ஒன்றிய செயலாளர் இலியாஸ், நகர செயலாளர் முகம்மது பாருக் (80564 18003), நகர துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹிம், ஹாசிம் சுல்தான் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
27.09.17

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.