பேரறிவாளனை சந்தித்த மஜக மாநில பொருளாளர்..!

image

image

வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை  அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில்  சந்தித்தார்கள்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது தனக்கு பரோல் கிடைக்க மிகுந்த உறுதுணையாக இருந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தோழர். பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மிகுந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்கள்

பின் பேரறிவாளன்
தந்தையை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பரோல் கிடைக்க ஆவண செய்த தமிழக அரசிற்கு மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்தார், தோழர்.பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.

இந்த நெகிழ்வான சந்திப்பின் போது உடன் மாநில அவைத் தலைவர் S.S.நாசிர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் , மாநில செயற்குழு உறுப்பினர் A.சையத் அபுதாஹிர்,

மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி காஞ்சி தெற்கு  மாவட்ட செயலாளர் N.அன்வர், வேலூர் (மேற்கு) மாவட்ட நிர்வாகிகள்,
குடியாத்தம் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
11.09.2017.