மஜக சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…!

image

image

image

image

புதுகை.செப்.10., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் , மணமேல்குடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கோட்டைப்பட்டினத்தில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல் கான் அவர்களை தலைமை தாங்கினார்.

கோட்டைப்பட்டினம் கிளைச்செயலாளர் ஹைதர் அலி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒலி முஹம்மது, செய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மேலும் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மஜக மாவட்ட செயலாளர் ஆசிரியர் முபாரக் அலி, மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டைப்பட்டினம் A.M.ஹாரிஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், ஆவுடையார் கோயில் ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ், ஒன்றிய பொருளாளர் முஹம்மது குஞ்சாலி, அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், தொழிற்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முகம்மது காலித், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் பாசித், கிளைச் செயலாளர்கள், அப்துல்லாஹ், முகம்மது யாசின், நாகூர் கனி, முகம்மது ராவுத்தர், அப்துல் காதர், பரீத் கான் ஆகியோர் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர்.

இறுதியில் மாவட்ட பொருளாளர் ஷேக் இஸ்மாயில் நன்றி கூறினார் .

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுகை_கிழக்கு_மாவட்டம்.
10.09.17