ஈரோட்டில் தொடங்கியது மஜக-வின் நன்கொடை சேகரிப்பு !

image

image

ஈரோடு.ஆக.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் தோறும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இம்மாதம் முழுவதும் பிரமுகர்கள், வணிகர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

நாகை (தெற்கு) மாவட்டத்தை தொடர்ந்து, ஈரோடு (கிழக்கு) மாவட்டத்திற்கு இன்று (08.08.17) மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் வருகை தந்தனர்.

வழக்கறிஞர் தேவராஜ், பாதிரியார் பிரகாஷ், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் ஜமாத்தார்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி நன்கொடைகளை சேகரித்தனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநாவாஸ் உள்ளிட்டோருடன்  ஈரோடு மாநகர ம.ஜ.க வினரும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
ஈரோடு கிழக்கு மாவட்டம்
08.08.17