இது காலத்தின் பதிவு…

image

மனிதநேய ஜனநாயக கட்சி ஓராண்டை கடந்த நிலையில் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. பதிவு செய்யப்படாத நிலையிலேயே, அரசியல் அங்கீகாரத்தையும், தேர்தல் வெற்றிகளையும் பெற்ற கட்சி தமிழகத்தில் மஜகவாகத்தான் இருக்கக் கூடும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தற்போது நெடிய உழைப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஈர நிலத்தில் விழுந்திருக்கும் விதையான மஜக, தற்போது வேலி அமைத்து வீரியமாக புறப்பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என மஜகவின் எழுச்சிமிக்க பயணத்தில் இணைந்திருப்போருக்கு இது ஒரு வசந்தகால செய்தியாகும்.

கட்சியை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டி பணியாற்றிய தலைமை நிர்வாகிகள் S.S.ஹாரூண் ரஷீத், மெளலா. நாசர், N.தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா ஆகியோருக்கும், ஜாவித், ஷமீம், அணீஸ் ஆகிய துடிப்புமிக்க இளம் சகோதரர்களுக்கும், இப்பணியில் உழைத்த இதர தலைமை நிர்வாகிகளுக்கும் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி ஜாவித் பலமுறை டெல்லிக்கு சென்று இப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இறைவன் நமது பணிகளை அங்கீகரிக்க பிராத்திப்போம்!

அன்புடன்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
08.06.2017