அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!

image

image

image

image

தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

நூருல் அமீன் ரஹ்மானி அவர்கள் நீதிபோதனை வழங்க நகர செயலாளர் முகம்மது செல்ல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் கிளைகளின் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அஹமது உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை குவைத் மண்டல செய்தி தொடர்பாளர் அப்துல் சமது தொகுத்து வழங்கினார். இறுதியாக நகர பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி உரை ஆற்றினார்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்
28-04-2017