தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை! மஜக கடும் கண்டனம்..

image

சென்னை.மார்ச்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மீனவ அணி செயலாளர் பார்த்தீபன் வெளியிடும் கண்டன அறிக்கை.

இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரத்தைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 21 வயதான மீனவர் ப்ரிட்சோ கொல்லப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக ஆட்சியின் மெத்தனப்போக்கால் தமிழகத்தில் மீனவர்களின் உயிர் பலி தொடர்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைக்கிறது.

இவண்
பார்த்தீபன்
மாநில செயலாளர்
மீனவ அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
06-03-2017
#MJK_IT_WING

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.