நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள்..! கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் வழங்கப்பட்டது…!!

நாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சரும், களமச்சேரி தொகுதி MLA V.K. இப்ராஹீம் குஞ்சு, முப்பத் தடம் கிராம முஸ்லிம் ஜமாத் செயலாளர் சாஜஹான், பிரைமரி முஸ்லிம் லீக் செயலாளர் இஸ்மாயில், பிரைமரி முஸ்லிம் லீக் துணை செயலாளர் அஷ்ரப், கடங்கலூர் ஆண்டனி மாஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் M. பரகத் அலி, மா.து. செயலாளர் ஜாஹீர் உசைன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மு.மா.து.செயலாளர் ஹமீது ஜெகபர், மஞ்சகொல்லை கிளை செயலாளர் சேக் அலி, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது, மஞ்சகொல்லை கிளையை சேர்ந்த 3 சகோதரர்கள் , பொரவாச்சேரி கிளையை சேர்ந்த 5 சகோதரர்கள் , மருங்கூர் பிரவின் குமார் ஆகியோர் கேரளா சென்று பொருட்களை நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
08.09.2018