திருப்பூரில் மாணவர் இந்தியா ஆலோசனை கூட்டம்..!

திருப்பூர்.ஆக.16.,
திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை
மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்ஃபில் ரிஸ்வான் தலைமை தாங்கினார்.

மாணவர் இந்தியா மாவட்ட துணைச்செயலாளர்
ஜாபர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி.

வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு. வ.அணி மா.து.செயலாளர் ரஹ்மான்.
இளைஞரணி
மாவட்ட செயலாளர் அசாருதீன். இ.அணி.மா.து.செயலாளர்.அபுதாஹீர்.
ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக அதிகமான மாணவர்களை சமூகநலப் பணிகளில் ஈடுபட செய்வது குறித்தும்,

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை சிராஜ் மஹாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் பங்குபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும்,

அடுத்த மாதம் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் மாபெரும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை செலுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட அலுவலகத்தை பகுதி நேர நூலகமாக மாற்றவேண்டும் என்ற பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி.MLA
அவர்களின் உத்தரவை செயலாற்றும் விதமாக மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
மஜக மாவட்ட நிர்வாகிகளிடம் அப்துல் கலாம் குறித்த நூல் ஒன்று வழங்கப்பட்டது.
மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

தகவல்;
#மாணவர்_இந்தியா
#திருப்பூர்_மாவட்டம்
16-08-2018