சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்..!

மதுரை. ஆக.14., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் சார்பில்,

நமது இந்திய தேசத்தின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையான ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் யா ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பிரித்திவிராஜ் தலைமை தாங்கினார். ஒத்தக்கடை கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் #மன்னை_செல்லச்சாமி அவர்கள் இந்த முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் அந்த பகுதியை சேர்ந்த
பொதுமக்களும் இளைஞர்களும் பெரியோர்களும் தங்களது ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மற்றும் புதூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை
மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாருக். மாவட்ட பொருளாளர் சுலைமான்.மாவட்டத் துணைச் செயலாளர்கள் சசிகுமார்.சிக்கந்தர். உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மதுரை_வடக்கு_மாவட்டம்
14-8-2018