மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

திருப்பூர்.ஆக.02., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார்
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார்.

சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில்
முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் விபரங்கள்.

1.எதிர்வரும் செப்டம்பர் 7ம் தேதி மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA , கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தனியரசு MLA
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் சேது.கருனாஸ் MLA ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்துவதெனவும்.,

2. பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 19 திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதெனவும்.,

3. கடந்த மாதம் திருப்பூர் வந்த பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர், புதியவர்களை கண்ணியப்படுத்தும்வகையில் ,
கட்சியில் இணைந்த சகோதரர்களில் ஒருவரான ராயல் பாஷா அவர்களை மாவட்ட துணைச்செயலாளராக நியமனம் செய்யக்கோரி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

4.பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட இனி வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிறன்று இரவு 7.30 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட அணியின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் முடியும் வரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலளார்கள், அக்பர் அலி, லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட தொழிற்சங்க அணிச்செயலாளர் சாகுல், மாவட்ட மனித உரிமைகள் அணி துணைச்செயலாளர் சாகுல். சிறப்பு அழைப்பாளராக
தலைமை செயற்குழு உறுப்பினர் Pm.இக்பால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
01-08-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.