உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்! மஜக கோரிக்கை.!

உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசை வலியுறுத்தியது.

அதனையொட்டி, இன்று #அமைச்சர்கள் #நிலோபர்_கபில், #வளர்மதி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது.

அதன் பிறகு அதில் இருந்த உலாமாக்களை அமைச்சர்களிடம் அழைத்து சென்ற மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் உலமாக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

உலமாக்கள் ஒய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து பேசுவதாகவும் கூறினார்.

அங்கு வந்த உலமாக்கள், தமிமுன் அன்சாரி MLA அவர் களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

தகவல்;
#இஸ்லாமிய_கலாச்சாரப்_பேரவை (IKP)