மஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா..! மாநில துணை செயலாளர் பங்கேற்பு..!!

சிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் சைஃபுல்லாஹ் அவர்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து அனைத்து சமுதாய மக்களுடனான நட்புனர்வை பேனுவதிலும், அடித்தட்டு மக்களுக்கு உதவிசெய்வதையும், அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுப்பது பற்றியும் நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூறி அனைத்து சமுதாய மக்களும் ஏன் மஜகவில் இணையவேண்டும் என்பது பற்றி கட்சியின் கொள்கைகளை விளக்கி சிற்றுரையாற்றினார்.

மேலும் இதில் மாநில வர்த்தகர் அணிதுணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட் அவர்களும் கலந்து கொண்டார்.

மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்களுக்கும், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் இடைக்காட்டூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் முகம்மது நாசர் அவர்களும், ஜாஹிர் உசேன் அவர்களும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பிறகு நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த கொடியேற்று நிகழ்வினை கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும், கிளை பொருளாளர் செய்யது இபுறாகிம் அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கொடியேற்றும் நிகழ்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சிவகங்கை_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.