சட்டபேரவையில் பள்ளி மாணவர்கள்…! இனிப்புகள் வழங்கினார் மஜக பொதுச்செயலாளர்…!!

சென்னை. ஜூலை.09., இன்று சட்டபேரவைக்கு சென்னை திருவல்லிக்கேணி- தாயார் சாஹிப் தெருவில் அமைந்துள்ள, #அரசு_முஸ்லிம்_உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பேரவையின் நடவடிக்கைகளை பார்வையிட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) ஏற்பாட்டில் வருகை தந்தனர்.

அவை நடவடிக்கைகளை பார்வையிட்டப்பிறகு அவர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அனைவரிடமும் அவை நடவடிக்கை பற்றி விசாரித்தார்.

பிறகு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார், ஆசிரியர்களுக்கு பேனாக்களை அன்பளிப்புகளாக வழங்கினார்.

பிள்ளைகளிடம் “நன்றாக எல்லோரும் படிக்க வேண்டும், கவனத்தை சிதர விடக்கூடாது” என்று அறிவுரை கூறினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை வளாகம்