மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை சீர் அமைக்கவேண்டும்…! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!!

நெல்லை.ஜுலை.06., மேலப்பாளையம் #அர்_ரஹ்மான் டிரஸ்டும், மனிதநேய ஜனநாயக கட்சியும் மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய கண்ணிமார் குளத்தை தூர்வாரி, அதனுடைய கரையை பலப்படுத்தி அந்த குளத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் முன்பு மனு கொடுக்கப்பட்டது.

அதனை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக பொதுப்பணிதுறைக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்பொழுது நினைவூட்டலாக கடந்த (04.07.2018) அன்று பல்வேறு ஊர்களின் நீர் நிலை பாதுகாப்பு குறித்து, மனு கொடுத்த போது முக்கியமாக மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு முதல்வரை சந்தித்து நேரில் கேட்டுக் கொண்டார்.

மேலப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்