IKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..!

சென்னை.ஜூன்.18., கடந்த 16.06.2018 அன்று #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியின் சார்பில் ஐஸ் ஹவுஸ் லேடி வில்லிங்டன் பள்ளியில் முப்தி.உமர் சரீப் காசிமி அவர்கள் குத்பா உரையுடன் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிலால் அஹமது அவர்களுடன் சேர்ந்து மஜக பகுதி செயலாளர் சாகுல் ஹமீது, பகுதி பொருளாளர் ஜலாலுதீன், பகுதி துணை செயலாளர்கள், முஹம்மது அலி இஷாக்,சையத் ஜமால், பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சலீம், இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் தொழுகைக்கான ஏற்பாட்டை மாவட்ட செயலாளர் M.Y.பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோரின் வழிகாட்டுதலின் படி மிக சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர் NA.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்ட பொருளாளர் A.அமீர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு திடல் தொழுகையில் 800க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#IKP_IT_WING
#IKP_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.