தொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..!

வேலூர்.ஜூன்.17., உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் #ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு, அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை வழிபாடுகள் (தூவா) செய்யப்பட்டது.

அதன் பின்னர், பெருநாளை முன்னிட்டு குடியாத்தம் பேருந்து நிலையத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முனவ்வர் ஷரிப் ஆகியோர் தொப்புள் கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கினார்கள், இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#மஜக_வேலூர்_மே_மாவட்டம்
16.06.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.