அன்பால் மக்களை இணைப்போம்..! தோப்புத்துறையில் மஜக சார்பில் அனைத்து மக்களுக்கும் நோன்பு கஞ்சி வினியோகம்..!!

வேதை.ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ரமலானில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சியை வினியோகிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி நாகை (தெற்கு) மாவட்டம் தோப்புத்துறையில் மஜக சார்பில் பொதுமக்கள் கூடும் ஆறுமுகச்சந்தியில், இன்று நோன்பு கஞ்சி பிரத்யோகமாக காய்ச்சப்பட்டு சகோதர சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது.பேருந்துகளில் செல்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், வாகன ஒட்டிகள் சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் அதை மகிழ்சியோடு பெற்று சென்றனர்.அதுபோல அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பிரமுகளுக்கும் அவர்களின் வீடுகளுக்கு நோன்பு கஞ்சி கொடுத்தனுப்பப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சமூக நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு அனைவராலும் வரவேற்க்கப்பட்டது.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்