புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு..! சட்டமன்றத்தில் மஜக கவனஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை. ஜூன்.11., கடந்த 08.06.2018 அன்று கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட வட்ட மேசை விவாதத்தில் பிஜேபி ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால், அதில் பதட்டம் உருவானது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி, அதன் செய்தியாளர், விவாதத்தில் பங்கேற்ற இயக்குனர் அமீர் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தமிழகம் முழுக்க பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது.

இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் K.R. ராமாசாமி, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, உ.தனியரசு MLA, ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, இந்த வழக்குகளை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல்துறையிடம் இது குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ! முதல்வர் அவர்கள் பதிலளித்தார்.

அதுபோல் திமுக உறுப்பினர்’ ராமச்சந்திரன் அவர்கள் காவிரி உருமை மீட்புக்குழு தலைவர் பே.மணியரசன் அவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது குறித்தும் அவையில் எழுப்பி, தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்க்கு பதிலளித்த முதல்வர் அவர்கள், இது குறித்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக பதிலளித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.