“நீட்” தோல்வியால் தற்கொலையான பிரதீபாவுக்கு நிவாரணம் வழங்குக..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்..!!

“நீட்” தேர்வெழுதி அதில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து மரணமடைந்த #பிரதீபா-வின் குடும்பத்திற்கு உரிய தேவையான நிவாரண உதவியும், அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அதுபோல் தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்றுவரும் #கீர்த்தனா-வுக்கு உரிய நிவாரண உதவியும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA அவர்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை நேரில் கொடுத்தனர்.

அவை உறுப்பினர்கள் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்படியார் அவர்கள் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
05.06.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.