தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்பு…!!

அறந்தாங்கி.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படும் ஸ்டெர்லைட் உயிர்கொல்லி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார்.

இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் ஜாமீன், மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர் ஆகிய மஜக நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் திமுக, காங்கிரஸ், மமகமற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
25.05.2018