இளைஞர்களை ஈர்த்த மஜகவின் களப்பணிகள்..! ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!

ஈரோடு.மே.20., இன்று ஈரோடு கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி இளைஞரணியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதல் கட்டமாக, 6-வது மற்றும் 7-வது வார்டுகளில் #மஜக முன்னெடுக்கும் களப்பணி பற்றிய குழு பிரச்சாரம் நடைபெற்றது.,

இரண்டாவது கட்டமாக, உறுப்பினர்கள் சேர்க்கை, முன்றாவது கட்டமாக, 7- வது வார்டில் கொடியேற்று விழா நடைபெற்றது.,

இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற பணிகள், மாநில பொருளாளர் மற்றும் ஈரோடு மாவட்ட மஜகவினர் ஆகியோரின் மக்களுக்கான களப்பணிகளின் ஈடுபாடுகள் தங்களுக்கு மிகவும் பிடித்தாகவும், குறிப்பாக காவிரி நீர் விவகாரத்தில் #மஜக-வினரின் தொடர் போரட்டங்கள் மற்றும் மக்களுக்கான சேவை அரசியலில் தங்களுக்கும் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதால், தாங்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தோம் என்று மிகவும் நெகிழ்வுடன் கூறினார்.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் R. #திலிப் குமார் முன்னிலையில் வகித்தார்,

பகுதி இளைஞரணி செயலாளர் #தினகரன் கொடியேற்றினார் .

இதில்,

6 வது வார்டு இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்னன் மற்றும் பரத், ஜெரோம் , மாத்யூ. ஸ்டீபன், ரமேஷ், குனா, சந்தோஷ், அன்பு செல்வன், ஆகியோர் கலந்து கொன்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
20.05.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.