நாகை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு விழா! அமைச்சர், MLA பங்கேற்ப்பு!

நாகை. ஏப்.22., அரசு மருத்துவமனையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

அமைச்சர் O.S மணியன் திறந்து வைக்க சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ICU நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள், மருத்துவமனையில் ஆங்காங்கே படுத்துறங்குவதை தவிற்பதற்காக, நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மட்டுமே தங்குவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

840 ச.மீட்டரில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 90 பேர் தங்கிக் கொள்ளலாம்.

சமையலறை, குளியளறை பொருள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகலும் இருக்கிறது.

தகவல்:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
22.04.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.