காவேரிக்காக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA எச்சரிக்கை..!

சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து” பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக அவைத்தலைவர் நாசர் உமரீ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநிலச் செயலாளர்கள் சீனி முகம்மது, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சமீம் அஹமது, தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் சுலைமான் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கரிமுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியபோது.

காவேரி உரிமைக்காக தன்னெழுச்சியாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த என்னையும்,மற்ற தலைவர்களையும் பார்ப்பதற்காக வந்த எங்கள் கட்சியின் பொருளாளர் #ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 8 பேரை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளியுள்ளனர்.

இதுபோல பல கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்ய தாமதித்தால், பெரும் போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று எச்சரித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தை மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட துணை செயலாளர் பகுர்தீன், பகுதி செயலாளர் அப்துல் ரசாக் பொருளாளர் S.M.முகம்மது அலி, பகுதி துணைச் செயலாளர்கள் முகம்மது ரசீன், ஷேக் முகம்மது, 87-வது வட்ட பொருளாளர் N.M.காசிம், செயலாளர் ஜெய்லானி புகாரி , 86- வது வட்ட செயலாளர் P.இப்ராஹீம், முகப்பேர் கிளை செயலாளர் முகைதீன் பாட்ஷா மற்றும் அயப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் ஜாகீர் உசேன், நாகூர் கனி, அபுதாஹீர் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
13.04.2018