மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!

சென்னை.பிப்.24., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருப்பாளர் & மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதில் மாவட்டச் செயலாளா் A.முஹம்மது ஹாலித், மாவட்ட பொருளாளா் பிஸ்மி, மாவட்டத் துணை செயலாளா்கள் பீர் முஹம்மது, அப்பாஸ், அணி செயலாளா்கள் மூஸாகனி, யூசுப், காஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுதல், தெருமுனை கூட்டம், இரத்த தான முகாம்கள், கிளைகளை அதிகப்படுத்துதல், விரைவில் மாவட்டப் பொதுக்குழு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.