நீலகிரி தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் பங்கேற்பு….

மார்ச்.29.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. ஆ. ராசா அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்கள் பங்கேற்று வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் S.R. பாபுலால், MJTS ஜாகிர் கான், MJVS பாரூக், இளைஞர் அணி பாபு, நகர செயலாளர் சலீம் உட்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #நீலகிரி_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
28.03.2024.

கோவை… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

மார்ச்.29.,

இந்தியா கூட்டணி சார்பில் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்தல் பணிமனை மஜக சார்பில் கோவையில் திறக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பனிமனையை திறந்து வைத்தார்.

அவருடன் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் N.கார்த்திக் EX.MLA., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில பொருளாளர் PMA.பைசல், MJTS மாநில துணைச் செயலாளர் கண்ணன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் மாவட்ட பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செயலாளர்கள் S.A. ஜாபர் சாதிக், H. ஹனிபா, A. அன்வர், KTU.காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் பயாஸ், சிராஜ், MMR. முஜீபுர் ரஹ்மான், ஹக்கிம், ஜாகிர், சலீம், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயர்குழு உறுப்பினர்கள் அபு, அபி, பைரோஸ், ரசீது, ஜகிர், பொள்ளாச்சி பகுதி செயலாளர் சம்சுதீன், தெற்கு பகுதி செயலாளர் சதாம் மற்றும் நவ்ஷாத், சகிர், ரபீக், உள்ளிட்ட மாவட்ட, அணி, கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
#தேர்தல்_பணிக்குழு
28.03.2024.

திருவண்ணாமலையில்… பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மார்ச்.28.,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.

புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவண்ணாமலை_மாவட்டம்
28.03.2024.

அபுதாபியில்… MKP சார்பில் நடைபெற்ற இதயங்களை இணைத்த இஃப்தார் நிகழ்வு….

மார்ச் 28,

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) அபுதாபி மாநகர கிளையின் சார்பாக “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” நேற்று அபுதாபி ஏர்போட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார் பாய் உணவகத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

நிகழ்வினை அபுதாபி மாநகரச் செயலாளர் சகோ. லால்பேட்டை ரைசுல் இஸ்லாம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். முதலில் இறைவேதம் ஓதி சீர்காழி அப்துல் காதிர் அவர்கள் தொடங்கி வைக்க, அபுதாபி மாநகர துணைச் செயலாளர் மதுரை ராஜா உசேன் அவர்கள் வந்திருந்த பேராளர்களையும், மனிதநேய சொந்தங்களையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் அபுதாபி மாநகர ஆலோசகர் ஆயங்குடி முஹம்மது ரியாஸ், அமீரக துணைச் செயலாளர் தோப்புத்துறை ரசூல் முஹம்மது, அமீரக ஆலோசகர் தோப்புத்துறை ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அசாலி அஹமது அவர்களும், மர்ஹாபா சமூக நலப் பேரவையின் தலைமை ஒருங்கினைப்பாளர் சுஹைபுத்தின் அவர்களும், அபுதாபி மக்கள் மன்றத்தின் நிறுவனரும், அபுதாபியில் பிரசித்திப் பெற்ற சமூக ஆர்வலருமான சகோ. சிவகுமார் அவர்களும், அபுதாபியின் புகழ்பெற்ற சேவை அமைப்பான அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் மௌலவி. லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களும், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்-ன் பொதுச்செயலாளர் சகோ. லால்பேட்டை முஹம்மது ரிலா அவர்களும் கலந்துகொண்டனர்.

சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏன் பேணப்பட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தி சகோ. சிவகுமார் அவர்களும், பொதுத் தளங்களில் மஜக ஆற்றிவரும் பணிகள் பற்றியும் அதனால் சமூகத்தில் விழையும் நல்மாறுதல்கள் பற்றி கலாநிதி. அசாலி அஹமது அவர்களும், ஒற்றுமையின் வலிமையும், அதன் அவசியத்தையும், அதனால் சமூகத்தில் நாமடையும் பெரும் பேறுகளையும் சகோ. சுஹைபுத்தின் அவர்களும் மிக்க ஆழமாக, காத்திரமாக தங்களது சிறப்புரைகளை வழங்கினார்கள்.

அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் மௌலவி. லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் அவர்கள் நோன்பு துறக்கும் வேளையில் இறைவனை இறைஞ்சி பிரார்த்தனை செய்தார்கள். இறுதியாக அபுதாபி மாநகர பொருளாளர் சகோ. தோப்புத்துறை ஷாஹுல் ஹமீத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு அபுதாபி, முஸப்பா மட்டுமல்லாது அல்-அய்ன், துபாய் போன்ற மாநகரங்களில் இருந்தும் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும், மர்ஹபா சமூக நலப் பேரவையின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்-ன் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், அய்மான் சங்கத்தின் உறுப்பினர்களும், நிர்வாகிகளும், தோப்புத்துறை மன்னனின் மைந்தர்களும் பெருந்திரளாக வந்து சிறப்பித்து இருந்தனர்.

அபுதாபி மாநகர துணைச் செயலாளர் சகோ. தோப்புத்துறை ஹக்கீம் அவர்கள் தலைமையிலான குழுவினர் மிகுந்த நேர்த்தியான முறையில் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து இருந்தனர்.

காயல். சுப்ஹான் காக்கா அவர்களின் ஒளிப்படங்கள் இந்நிகழ்வினை மேலும் வண்ணமயமாக்கியது.

அபுதாபி ஜப்பார் பாய் உணவகத்தின் உரிமையாளர் பெரோஸ் அலி மற்றும் அவர்கள் ஊழியர்களின் வாஞ்சை மிக்க விருந்தோம்பலில் வந்திருந்த அனைவரும் திளைத்து தங்களது அன்பையும், வாழ்த்துகளையும்
தெரிவித்துக்கொண்டனர்.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சகோதரத்ததுவம், வாஞ்சையுணர்வு போன்ற உயரிய கருத்துகளை வந்த்திருந்த அனைவரின் உள்ளத்திலும், சிந்தையிலுமேற்றி இந்நிகழ்வு இனிதாய் நிறைவுற்றது.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_Wing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#அபுதாபி_மாநகரம்
#ஐக்கிய_அரபு_அமீரகம்
27.03.2024.

நெல்லையில்… இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….

இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. இராபர்ட் புரூஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அண்ணாச்சி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. டி.பி.எம்.மைதீன்கான், பாளை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகர், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. சரவணன், துணை மேயர் திரு. ராஜு, பாளை மண்டல தலைவர் திரு :பிரான்சிஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.சங்கர பாண்டியன்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் மற்றும் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் சேக், நாங்குநேரி பொறுப்பாளர் முகமது அலியார் மண்டல இளைஞர் அணி செயலாளர் அசரப் பாளை பகுதி செயலாளர் காஜா மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா மற்றும் பகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தேர்தல்_பணி_குழு
#நெல்லை_நாடாளுமன்ற_தொகுதி #மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.03.2024.